ட்விட்டர் சமூகம் நொடிக்கு சராசரியாக மூன்று ட்விட்களைக் கொண்டு தமிழக மீனவர்களின் படுகொலைகளைக் கண்டித்து, மிகுந்த உத்வேகத்துடன் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் ஒருங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒன்று பட்டுக் குரல் கொடுத்தால் சமூக வலைதளங்களின் பயன்களை குறிப்பிட்டதொரு தொலைவிற்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற புதிய துவக்கத்தை தமிழ் இணையதள பயன்பாட்டாளர்கள் உணர்ந்திருப்பார்கள் .
http://www.savetnfisherman.org/
இந்த இணையதளக் கோரிக்கைகளினால் இந்திய தேசம், தமிழர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் என்றோ தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது இத்துடன் முடிந்து விடும் என்றோ நினைப்பது அறியாமையே! வேண்டுமானால் அடுத்த மரணத்தை சிறிது காலம் தள்ளிப் போடலாம். அதுவும் சிங்கள ராணுவத்தின் கருணைக் கைகளில் தான் அடங்கி இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திய தேசம் என்ற கட்டமைப்புக்குள் நின்று கொண்டு, அதிகார மையங்களைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்பது தான் சாத்தியமான "தற்போதைய" எதார்த்தம்.
ஆட்சியில் இருக்கும் மத்திய மாநில அரசியல்வாதிகளின் அறிக்கைகளில் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதனால் தான் இது போன்ற அசம்பாவிதங்கள் நடை பெறுவதாகவும், இனிமேல் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்றும் செல்லமாக மிரட்டல் விடுப்பார்கள். இது ஒரு வடிகட்டிய பொய் என்பதையும் மீனவர்களுக்கான உரிமைகளையும், ஐ. நா. வின் பன்னாட்டுக் கடல் சட்டங்கள் (United Nations Convention on the Law of the Sea) தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒரு நாட்டுக்கான கடல் எல்லை என்பது 12 கடல் மைல்கள் தான் என்றாலும் கடலோர நாடுகளின் பொருளாதார எல்லை(EEZ) மற்றும் மீனவர்களின் உரிமைகள் (EFZ) ஆகியவற்றை முன்வைத்து அவர்கள் 200 கடல் மைல் தொலைவு வரை சென்று வர அனுமதி இருக்கிறது. இதை இரு நாட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் நடைமுறைப்படுதலாம் என்பதும் தெளிவான ஒன்று.
http://www.un.org/Depts/los/convention_agreements/convention_overview_convention.htm
* Coastal States exercise sovereignty over their territorial sea which they have the right to establish its breadth up to a limit not to exceed 12 nautical miles; foreign vessels are allowed "innocent passage" through those waters;
"* Coastal States have sovereign rights in a 200-nautical mile exclusive economic zone (EEZ) with respect to natural resources and certain economic activities, and exercise jurisdiction over marine science research and environmental protection;"
http://www.suite101.com/content/the-united-nations-law-of-the-sea-a329696
ஐ. நா. சொல்லியிருக்கும் "sovereign rights " எனப்படும் இறையாண்மை என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு மட்டும் பொருள் வேறானதாக இருக்கிறது. இதில் மீனவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டியது அந்த குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது மட்டுமின்றி 200 கடல் மைல் தொலைவுகள் வரை மீனவர்கள் செல்வதற்கு எந்த அன்னிய நாடும் தடை விதிக்க முடியாது என்பதே எளிமையான உண்மை.
இதை மனதில் கொண்டால், மீனவர் படுகொலைகளைக் கண்டித்தல் என்பது முழுக்க முழுக்க இறையாண்மைக்கு உட்பட்டதே ! இணையத் தமிழர்கள் தமக்கான எல்லைகளில் நின்று கொண்டு என்ன விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதில் முக்கியமாக ஆங்கில வழி தகவல் பரிமாற்றங்களையும், அதைக் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகளையும் கையாள வேண்டும். இந்து ராமையும் சோ வையும் எதிர்த்து எழுதுவது முக்கியம் என்றாலும், நம் கோரிக்கைகளுக்கான அதிகார எல்லைகள் அதனினும் பெரியது.
அதற்காக, இணையத்தில் ஆங்கில வழி தகவல் பரிமாற்றங்களும், கோரிக்கைகளையும் பதிவு செய்தல் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. இந்த நோக்கத்தை முன்வைத்து இணையத் தமிழர்கள் தங்களது கணிசமான பங்கீடுகளை வழங்க வேண்டும் என்பதும் அதன் மூலம் களத்தில் நின்று இயங்கும் "உண்மையான" உணர்வாளர்களுக்குப் பெரிதும் துணை புரியும் என்பதும் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகள் தான் என்பது மிகுந்த புத்துணர்வைத் தருகிறது.
2 Responses to "#tnfisherman : ட்விட்டர் கோரிக்கைகள் உணர்த்தும் உண்மைகள்"
Please read துனிசிய புரட்சி வென்றது எப்படி ? தமிழர்கள் அறிய வேண்டியவை #tnfisherman
நன்றி நண்பரே! நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு. உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
Post a Comment